ஹரித்வாரில் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு உத்தராகண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழை காரணமாக, ஹரித்வாரில் பாயும் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பீம்கோடா தடுப்பணையில் (Bhimgoda Barrage) கங்கை நதியின் நீர்மட்டம் அபாயகரமான 'எச்சரிக்கை அளவை' எட்டியுள்ளது. நதிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.