காவிரி ஆற்றில் குளித்த சுற்றுலா பயணிகள் மீது யானை தாக்குதல் கர்நாடகா மாநிலம் மேகதாது சுற்றுலாத்தலத்தில், காட்டு யானை ஒன்று சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநகரா மாவட்டத்தில் மேகேதாட்டு அருகே காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது, காட்டிலிருந்து தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை காட்டு யானை திடீரென அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. காட்டுயானையின் திடீர் தாக்குதலால் அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் அலறி ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தில் பெண் சுற்றுலா பயணி ஒருவர் காயம் அடைந்தார்