இந்தியா

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் - ஐ.நா.வில் விரைவில் தீர்மானம்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் விரைவில் தீர்மானம் கொண்டு வரும் என பிரான்ஸ் தூதர் கூறினார்.

தந்தி டிவி
பெங்களூரு-வில் சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது. இதில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ரே ஜூக்லர் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக தனக்கு எதுவும் தெரியாது என்றார். இது மிகச்சிறந்த விமானம் எனக் குறிப்பிட்ட அலெக்ஸாண்ரே ஜூக்லர், இன்னும் 6 மாதத்தில் இந்திய விமான படையில் ரபேல் சேர்க்கப்படும் என தெரிவித்தார். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் விரைவில் தீர்மானம் கொண்டு வரும் என அவர் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்