இந்தியா

ஒடிசாவை ஆள போகும் தமிழர்..? பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் முன்னாள் IAS வி.கே.பாண்டியன்

தந்தி டிவி

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்து நேரடி அரசியலில் களம்கண்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன், 2000ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி பெற்றார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பதவி வகித்த அவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் அம்மாநில அரசின் மாநில வளர்ச்சிக்கான "5T" மற்றும் "நபின் ஒடிசா" திட்டங்களின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்பட்டார். கேபினட் அமைச்சருக்கு இணையான பதவியை வகித்து வரும் வி.கே. பாண்டியன், ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் வி.கே. பாண்டியன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்