இந்தியா

இனி இப்படி `இடியாப்பம்' விற்க முடியாது.! - வெளியான அதிரடி உத்தரவு

தந்தி டிவி

சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்ய உணவுபாதுக்காப்புதுறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

இடியாப்பம், இடியாப்பம் என இந்த சத்தத்தை சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கேட்கமுடியும்.

இப்படி விற்பனை செய்யப்படும் இடியாப்பத்தில் தரம் இல்லை என வந்த புகார்களின் அடிப்படையில் உணவு கட்டுப்பாடு துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதன்படி இனி இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுக்காப்பு துறையின் உரிமம் பெற வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை இதனை புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான மாவுகளை பயன்படுத்தவும், கை மற்றும் தலையில் உறைகள் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் இடியாப்பம் விற்பனையில் ஈடுபடவும் உணவு பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்