இந்தியா

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பஞ்சுமிட்டாய்க்கு அதிரடி தடை..

தந்தி டிவி

புதுச்சேரி, தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சுகாதாரத்துறையினர், பல்வேறு கடைகளில் இருந்து பஞ்சுமிட்டாய், கோபி மஞ்சூரியன் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பஞ்சு மிட்டாயில் நிறத்திற்காக ரோடாமைன் பி என்னும் வேதிப்பொருளும், கோபி மஞ்சூரியனில் சன்செட் என்னும் வேதிப்பொருளும் இருப்பது தெரியவந்தது. இந்த வேதிப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால், நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை செய்பவர்களுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறமிகள் இன்றி விற்பனை செய்யப்படும், பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனுக்கு தடை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்