Flight Ticket | குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள்.. கோடிக்கணக்கில் சுருட்டிய மோசடி கும்பல் உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில், குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து தருவதாக கூறி வெளிநாட்டவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த சர்வதேச இணைய மோசடி கும்பல் சிக்கியுள்ளது... செக்டர்-63 பகுதியில் போலி கால் சென்டர் நடத்தி வந்த இந்த கும்பல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களை குறிவைத்து, விமான நிறுவன பிரதிநிதிகள் போல நடித்து நம்பிக்கை ஏற்படுத்தி பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது. கூகுள் மற்றும் சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு இவர்கள் மோசடி செய்துள்ளனர். இதுவரை 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான பண மோசடி நடந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மடிக்கணினி மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.