உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் உள்ள 5 அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கீழ் தளத்தில் தொடங்கிய தீ மளமளவென மேல் தளங்களுக்கும் பரவியதால், குடியிருப்போர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், 5-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் போராடி சுமார் 50 பேரை பத்திரமாக மீட்டனர். எனினும், கட்டிடத்தின் சில பகுதிகளில் தீ இன்னும் கட்டுக்குள் வராததால், உயிரிழப்புகள் ஏற்படலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இதனிடையே சவுக்கு மரங்கள் மூலம் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்து, மற்றொரு கட்டடத்திற்கு குடியிருப்புவாசி கள் கடந்து சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது..