Fire Accident | Hyderabad | பயங்கரமாக பற்றி எரிந்த தீ.. மொத்தமாக கருகி சாம்பலான 7 கடைகள் #
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சாடர்காட் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கார் பழுதுபார்க்கும் நிலையங்கள் உட்பட ஏழு கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏழு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் இருப்பதை தடுத்து, தற்போது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.