இந்தியா

"உர்ஜித் படேலுக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்திய அரசு" - ப.சிதம்பரம்

ராமர் கோவில் கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டுவந்தால் அது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக அமையும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதுவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானதே என்றும் தெரிவித்தார்.

* ரிசர்வ் வங்கி ஆளுநர், உர்ஜித் சிங் படேலை ராஜினாமா செய்ய வைக்க மத்திய அரசு மறைமுகமாக அழுத்தம் கொடுப்பதாக சிதம்பரம் அப்போது குற்றம் சாட்டினார்.

* அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற மத்திய அரசின் திட்டம் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட திட்டமே எனவும் அதனை பாஜக அரசு பெயர் மாற்றி ஜன்தன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

* ரூபாய் நோட்டு நடவடிக்கையின் போது ஜன்தன் வங்கி கணக்குகளில் 42 ஆயிரம் கோடி ரூபாய் பணம் திடீரென எப்படி வந்தது என்றே தெரியவில்லை எனவும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்