இந்திய வம்சாவளி நபரைத் தேடும் FBI அமெரிக்காவில் கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பேஷ்குமார் ரசிக்பாய் படேல் என்பவரை எஃப்பிஐ அமைப்பினர்(FBI) தீவிரமாகத் தேடி வருகின்றனர். 'கென்னி படேல்' என்று அழைக்கப்படும் இவர், 2017 முதல் 2021 வரை தொலைபேசி வாயிலாகப் பலரை மிரட்டிப் பணம் பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது இல்லினாய்ஸ் அல்லது பென்சில்வேனியா பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படும் இவரைப் பற்றித் தகவல் தெரிந்தால், உடனடியாகத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு எஃப்பிஐ கோரியுள்ளது.