இந்தியா

"கரண்ட் ஒழுங்கா கொடுக்கமாட்டியா ..?" EB ஆபிஸுக்குள் முதலையை விட்ட விவசாயிகள் - அலறிய ஊழியர்கள்

தந்தி டிவி

கர்நாடகாவில் முறையான மின்சாரம் வழங்கக்கோரி, மின்வாரிய அலுவலகத்திற்கு முதலையை கொண்டு வந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கர்நாடகாவில் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக விவசாயிகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜயப்பூர் மாவட்டம், ரோனிஹாலா கிராமத்தில், கிருஷ்ணா ஆற்றில் இருந்து முதலை ஒன்று விவசாய நிலத்தின் அருகே நுழைந்தது. இதனை கிராம மக்கள் பிடித்து, மின் பகிர்மான நிலையத்திற்கு கொண்டு வந்து, முறையான மின்சாரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரமின்றி நீர்பாய்ச்ச முடியாமல் நிலங்கள் வறண்டுபோயுள்ளதாகவும் தெரிவித்தனர். இரவில் மும்முனை மின்சாரம் வழங்குவதால், முதலை, பாம்பு, தேள்கடிக்கு ஆளாக நேரிடுவதாகவும் கூறினர். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மின்துறை அதிகாரிகள் கூறியதை அடுத்து, வனத்துறையினரிடம் முதலை ஒப்படைக்கப்பட்டது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்