இந்தியா

காசிபூரில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்

டெல்லி மற்றும் உத்தரபிரதேச எல்லையான காசிபூரில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

டெல்லி மற்றும் உத்தரபிரதேச எல்லையான காசிபூரில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

காசிபூர் எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் வெளியேற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் விடுத்துள்ளது. இருப்பினும் வெளியேற மறுத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாரத் கிசான் யூனியன் செய்தி தொடர்பாளர் ராகேஷ் பேசுகையில், தாங்கள் தற்கொலை வேண்டும் என்றால் செய்வோமே தவிர, சட்டங்களை திரும்ப பெறும் வரையில் இங்கிருந்து வெளியேற மாட்டோம் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே எல்லையில் உத்தரபிரதேச அரசு போலீசை குவித்துள்ளதால் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதற்கிடையே அனைத்து பகுதியிலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதை உறுதி செய்யுமாறு உத்தரபிரதேச அரசு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு