இந்தியா

காசிபூரில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்

டெல்லி மற்றும் உத்தரபிரதேச எல்லையான காசிபூரில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

டெல்லி மற்றும் உத்தரபிரதேச எல்லையான காசிபூரில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

காசிபூர் எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் வெளியேற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் விடுத்துள்ளது. இருப்பினும் வெளியேற மறுத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாரத் கிசான் யூனியன் செய்தி தொடர்பாளர் ராகேஷ் பேசுகையில், தாங்கள் தற்கொலை வேண்டும் என்றால் செய்வோமே தவிர, சட்டங்களை திரும்ப பெறும் வரையில் இங்கிருந்து வெளியேற மாட்டோம் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே எல்லையில் உத்தரபிரதேச அரசு போலீசை குவித்துள்ளதால் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதற்கிடையே அனைத்து பகுதியிலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதை உறுதி செய்யுமாறு உத்தரபிரதேச அரசு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை