இந்தியா

காசிபூரில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்

டெல்லி மற்றும் உத்தரபிரதேச எல்லையான காசிபூரில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

டெல்லி மற்றும் உத்தரபிரதேச எல்லையான காசிபூரில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

காசிபூர் எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் வெளியேற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் விடுத்துள்ளது. இருப்பினும் வெளியேற மறுத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாரத் கிசான் யூனியன் செய்தி தொடர்பாளர் ராகேஷ் பேசுகையில், தாங்கள் தற்கொலை வேண்டும் என்றால் செய்வோமே தவிர, சட்டங்களை திரும்ப பெறும் வரையில் இங்கிருந்து வெளியேற மாட்டோம் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே எல்லையில் உத்தரபிரதேச அரசு போலீசை குவித்துள்ளதால் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதற்கிடையே அனைத்து பகுதியிலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதை உறுதி செய்யுமாறு உத்தரபிரதேச அரசு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு