இந்தியா

சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டதாக புகார் - தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு சம்மன்

சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்ய லஞ்சம் வழங்கப்பட்டதாக பதிவாகியுள்ள புகார் தொடர்பாக, விளக்கம் அளிக்குமாறு தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு, கர்நாடக ஊழல் தடுப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், அதற்காக முன்னாள் காவல் துறை இயக்குநர் சத்யநாராயணா உள்ளிட்டோருக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடந்து வரும் நிலையில், லஞ்ச புகார் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தினகரன் ஆதரவாளரான புகழேந்தியிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 29-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு புகழேந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை