கண்களை கவரும் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம்.. "குட்டிஸ்க்கு ஏத்த இடம்" | கேரளா
கேரளாவில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்ட கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சூர் பஞ்சவடி கடற்கரையையொட்டி, சாவாக்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட காட்சியகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரபைமா, பிரன்ஹா, ஸ்டிங்ரே, நட்சத்திர மீன்கள், சுறா உட்பட பல்வேறு விதமான மீன்கள் மற்றும் ஆமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.