இந்தியா

தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு - விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில்,இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் மூன்றாம் நிலை ஊழியராக பணிபுரிந்த 43 வயதான நாகராஜ் கடந்த 16ஆம் தேதி கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். கடந்த 2 நாட்களாக எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவர் கொரோனா தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என கர்நாடக சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே அவருக்கு இருந்த நோய் தாக்கத்தின் காரணமாக திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது உடல் கூறு ஆய்வு மற்றும் ரத்தம் மாதிரிகள் தடயவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்