இந்தியா

ரூ.200 கோடி மோசடி செய்ததாக பிரபல பாலிவுட் நடிகையின் முன்னாள் காதலன் வழக்கு..

தந்தி டிவி

200 கோடி மோசடி புகாரில் சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்களை, கர்நாடகா ஐடி மற்றும் அமலாக்கத்துறை இன்று ஏலத்தில் விட உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸின் முன்னாள் காதலன் சுகேஷ் சந்திரசேகர், பண மோசடி வழக்கில், டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்களை, ஆன்லைன் மூலம் ஏலத்தில் விட கர்நாடகா வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி இ, ரேஞ்ஜ் ரோவர், ஜாகுவார் எக்ஸ்கேஆர் கூபே, பென்ட்லீ உள்ளிட்ட ஆடம்பர கார்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. 2018 - 19ம் ஆண்டில் சுகேஷ் சந்திரசேகருக்கு வழங்கப்பட்ட கடன் தொகையானை 308 கோடியே 48 லட்சத்தை மீட்டெடுக்கும் பொருட்டு இந்த சொகுசு கார் ஏலம் நடைபெறுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ