#uniongovt #parliamentsession சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்ற கூட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 9ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. ரமலான், யுகாதி, ராம் நவமி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால், அந்த தினங்களில் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம் பல்வேறு முக்கிய மசோதாக்கள் மற்றும் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதமும் நடத்தப்பட வேண்டிய சூழல் உள்ளதால், இம்மாதம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையான 28, 29 ஆகிய தேதிகளிலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.