பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பேசிய அவர், அசாமில் மூங்கிலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்ததை சுட்டிக்காட்டி , பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1.4 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.