இந்தியா

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா

கர்நாடகா முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.

தந்தி டிவி

கர்நாடகா முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பங்கேற்று பேசிய எடியூரப்பாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். தொடர்ந்து உருக்கமாக பேசிய அவர், கட்சிக்காக விசுவாசத்துடன் பணியாற்றுவேன் என்றார். சாதனை விளக்க கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு எடியூரப்பாக சென்றார்.

அங்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்த எடியூரப்பா, தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார். கர்நாடகாவில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு 2-வது முறையாக எடியூரப்பாக ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்