இந்தியா

ED-ன் அடுத்த அதிரடி...சிக்கலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர்

தந்தி டிவி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கிய 848 கோடியே 86 லட்சம் ரூபாய் கடனில், 538 கோடியே 62 லட்சம் ரூபாயை அந்நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என கனரா வங்கி குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்த சி.பி.ஐ, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இந்த மோசடி குறித்து அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வரும் 11-ம் தேதி வரை நரேஷ் கோயலை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், வங்கியில் இருந்து பெற்ற கடன் மூலம் இங்கிலாந்து, துபாயில் நரேஷ் கோயல் சொத்துகளை வாங்கியுள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொழில்முறை மற்றும் ஆலோசனை செலவுகள் என, சந்தேகத்திற்குரிய வகையில், 1000 கோடி ரூபாய் செலவினம் காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்