கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே 56 வயதான நபர், மதுபோதையில் வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்த போலீசார், போதை நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றபோது, அவர் ஒத்துழைக்க மறுத்துள்ளார். இதையடுத்து கிணற்றின் அருகே போதை ஆசாமியை குளிப்பாட்டிய போலீசார், பின்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனர்.