இந்தியா

மருத்துவர்கள் போராட்டம்... வெளியான நிம்மதியான அறிவிப்பு

தந்தி டிவி

மருத்துவர்கள் போராட்டம்... வெளியான நிம்மதியான அறிவிப்பு

மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், வெளிப்புற சிகிச்சை பிரிவு காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் ஜிப்மரில் உள்ள அனைத்து வெளிப்புற சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வகங்கள் மற்றும் ஸ்கேன் சேவைகள் உட்பட அனைத்து பிரிவுகள் வழக்கம் போல செயல்படும் என ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்