இந்தியா

கொரோனா இரண்டாம் அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு

கொரோனா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள இந்த தகவலில், நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 67 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் ராஜஸ்தானில் 43 மருத்துவர்களும், ஜார்கண்ட் மாநிலத்தில் 39 மருத்துவர்களும் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே குறைவாக உத்தரகாண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் தமிழகத்தில் 21 மருத்துவர்களும், புதுச்சேரியில் 1 மருத்துவரும் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்