இந்தியா

பீதியில் இங்கேயும் அங்கேயும் ஓட வேண்டாம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

ஆக்ஸிஜன் முன்பும், இப்போதும் போதுமான அளவில் கிடைக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ஸிஜன் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். தொழிற்சாலை மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவதை சேமிப்பு டேங்கர்கள் மற்றும் கிரையோஜெனிக் டேங்கர்கள் மூலம் பயன்படுத்தி வருவதாகவும் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். ஆக்ஸிஜன் தொடர்பான சரியான தகவலும் மிக முக்கியமானது என தெரிவித்த அவர், பீதியில் அவரவர்களுக்கு ஆக்சிஜன் தேவை என யாராவது நினைத்தால் அது சரியில்லை என மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். பீதியில் இங்கேயும் அங்கேயும் மக்கள் ஓட வேண்டாம் என்றும், பெரும்பாலான நோயாளிகள் மருத்துவர்களை தொடர்பு கொண்டு வீட்டிலேயே குணமடையலாம் என ஒரு மருத்துவராக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு