இந்தியா

பீதியில் இங்கேயும் அங்கேயும் ஓட வேண்டாம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

ஆக்ஸிஜன் முன்பும், இப்போதும் போதுமான அளவில் கிடைக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ஸிஜன் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். தொழிற்சாலை மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவதை சேமிப்பு டேங்கர்கள் மற்றும் கிரையோஜெனிக் டேங்கர்கள் மூலம் பயன்படுத்தி வருவதாகவும் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். ஆக்ஸிஜன் தொடர்பான சரியான தகவலும் மிக முக்கியமானது என தெரிவித்த அவர், பீதியில் அவரவர்களுக்கு ஆக்சிஜன் தேவை என யாராவது நினைத்தால் அது சரியில்லை என மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். பீதியில் இங்கேயும் அங்கேயும் மக்கள் ஓட வேண்டாம் என்றும், பெரும்பாலான நோயாளிகள் மருத்துவர்களை தொடர்பு கொண்டு வீட்டிலேயே குணமடையலாம் என ஒரு மருத்துவராக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்