இந்தியா

பீதியில் இங்கேயும் அங்கேயும் ஓட வேண்டாம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

ஆக்ஸிஜன் முன்பும், இப்போதும் போதுமான அளவில் கிடைக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ஸிஜன் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். தொழிற்சாலை மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவதை சேமிப்பு டேங்கர்கள் மற்றும் கிரையோஜெனிக் டேங்கர்கள் மூலம் பயன்படுத்தி வருவதாகவும் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். ஆக்ஸிஜன் தொடர்பான சரியான தகவலும் மிக முக்கியமானது என தெரிவித்த அவர், பீதியில் அவரவர்களுக்கு ஆக்சிஜன் தேவை என யாராவது நினைத்தால் அது சரியில்லை என மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். பீதியில் இங்கேயும் அங்கேயும் மக்கள் ஓட வேண்டாம் என்றும், பெரும்பாலான நோயாளிகள் மருத்துவர்களை தொடர்பு கொண்டு வீட்டிலேயே குணமடையலாம் என ஒரு மருத்துவராக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி