இந்தியா

காஷ்மீரை உலுக்கிய பேரழிவு - 46 பேர் பலி.. 200 பேரை காணவில்லை

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கிஷ்த்வார் நகரில் உள்ள சோசிட்டி கிராமத்தில் மிகப்பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள மாதா சண்டி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் மேகவெடிப்பு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 200 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து 200 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பேரழிவு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கமளித்துள்ளதாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே