இந்தியா

சிதிலம் அடைந்த தொகுப்பு வீடுகள் - குடியிருப்பு வாசிகள் அச்சம்

ஒசூர் அருகேயுள்ள தொகுப்பு வீடுகளில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பழங்குடியின மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

தந்தி டிவி

ஒசூர் அருகேயுள்ள தொகுப்பு வீடுகளில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பழங்குடியின மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள அத்தூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளில் 200க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 28க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை, முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பொது மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால், மேற்கூரை வழியாக மழை நீர் ஒழுகும் நிலையும் உருவாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். வீடுகளை பழுது பார்க்க தங்களிடம் போதுமான பொருளாதார வசதி இல்லை என்றும், தமிழக அரசு தங்களுக்கு நிதியுதவி அளித்து உதவ வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு