நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தாயாரை இரண்டு கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் மகாலட்சுமியாக பக்தர்கள் அலங்கரித்தனர். நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, பணத்தாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த கன்னிகா பரமேஸ்வரி தாயாரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர்.