இந்தியா

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பம்பை முற்றிலும் உருக்குலைந்தது. இதன் காரணமாக, பக்தர்களின் வாகனம் நிறுத்தும் இடம் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து கேரள அரசு பேருந்து மூலம் பம்பைக்கு சென்று, சபரிமலைக்கு செல்ல வேண்டும். இதற்கிடையே, சபரிமலை வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருந்ததால் கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை