இந்தியா

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பம்பை முற்றிலும் உருக்குலைந்தது. இதன் காரணமாக, பக்தர்களின் வாகனம் நிறுத்தும் இடம் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து கேரள அரசு பேருந்து மூலம் பம்பைக்கு சென்று, சபரிமலைக்கு செல்ல வேண்டும். இதற்கிடையே, சபரிமலை வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருந்ததால் கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்