இந்தியா

திருப்பதி பக்தர்கள் வருகை குறைவால் 2 மணி நேரத்தில் தரிசனம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது.

தந்தி டிவி
திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது. ஏழுமலையான் கோவிலின் கும்பாபிஷேகம், வருகிற 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக யாக பூஜைகள் தொடங்கி உள்ளன. கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதால் குறைவான பக்தர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், திருமலையில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், 2 மணி நேரத்திற்குள்ளாக தரிசனம் செய்ய முடிகிறது. அன்னதான கூடம், தலைமுடி காணிக்கை தரும் இடம் போன்றவற்றில் மிக குறைவான அளவிலேயே பக்தர்கள் காணப்படுகின்றனர். இதனால், நேற்று உண்டியல் வருமானமாக ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் மட்டுமே வந்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ