Devandra Fadnavis | ``விவசாயத்தில் AI’’ - பெரிதாக யோசித்த மகாராஷ்டிரா CM #ai #agriculture #maharashtra #thanthitv "விவசாயத்திற்கு AI அவசியம்" - மகாராஷ்டிரா முதல்வர் டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், உணவுப் பாதுகாப்பும் காலநிலை மாற்ற சவால்களையும் சமாளிக்க செயற்கை நுண்ணறிவு விவசாயத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார். வானிலை முன்னறிவிப்பு, பூச்சி தாக்குதல் எச்சரிக்கை, துல்லியமான பாசனம் போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பயன் தரும் என தெரிவித்தார். மேலும், மத்திய விவசாயத் துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி (Devesh Chaturvedi) ai உதவியுடன் டிஜிட்டல் தளங்கள் மூலம் விவசாயிகளுக்கு தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்கலாம் எனவும், உலக வங்கித் துணைத் தலைவர் ஜோகன்னஸ் ஜட் (Johannes Zutt) இந்தியாவில் AI வெற்றி பெற்றால் அது உலகிற்கு முன்னுதாரணமாக அமையும் எனவும் தெரிவித்தனர்.