Bihar | ஆத்திரமடைந்து நடுரோட்டிலேயே வைத்து எரிக்கப்பட்ட மூதாட்டி உடல் #bihar #deadbody #lastceremony #thanthitv சுடுகாட்டிற்கு செல்ல வழி மறுப்பு - மூதாட்டி உடல் சாலையில் தகனம் பீகாரில் சுடுகாட்டிற்கு செல்ல வழி மறுக்கப்பட்டதால், மூதாட்டியின் உடல் சாலையில் வைத்து தகனம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 91 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். அவரது உடலை தகனம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றபோது, ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் சடலத்தை சாலையின் நடுவில் வைத்து அங்கேயே தகனம் செய்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வைஷாலி மாவட்ட ஆட்சியர் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.