Online Order | கூப்பிட்ட இடத்திற்கு வர மறுத்ததால் Delivery Boy மீது கொலைவெறி தாக்குதல்
டெலிவரி ஊழியரை தாக்கிய சிறைத்துறை அதிகாரி
உத்திரப்பிரதேசத்தில் டெலிவரி ஊழியர் மீது சிறைத்துறை அதிகாரி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை அடுத்த சைனிக் நகர் பகுதியில் வசிக்கும் சிறைத் துறை அதிகாரி ஒருவர், ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி பாய் ஆதித்யா என்பவர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபொழுது, முதல் மாடிக்கு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிறைத்துறை அதிகாரி, டெலிவரி பாயை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.