இந்தியா

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - பாஜக MP தலைமேல் தொங்கும் கத்தி-நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மல்யுத்த வீராங்கனை தொடர்ந்த பாலியல் சீண்டல் வழக்கு விசாரணை ஆவணங்களின் நகல்களை வழங்கக்கோரி பா.ஜ.க. எம்.பி பிரிஜ் பூஷண் சிங் தாக்கல் மனு மீது வரும் 26 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக டெல்லி மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

புகாரில் தெரிவிக்கப்பட்ட தேதியில் தான் டெல்லியில் இல்லை என்பதால், அது தொடர்பான ஆவண நகல்களை தனக்கு வழங்க வேண்டும் என பிரிஜ் பூஷன் சிங் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவுக்கு டெல்லி காவல்துறை மற்றும் மல்யுத்த வீராங்கனைகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் பிரிஜ்புஷன் சிங் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரிஜ்புஷன் சிங் மனு வரும் 26ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி பிரியங்கா ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்