இந்தியா

கலவர பகுதிகளில் அஜித் தோவல் ஆய்வு : காவல்துறை அதிகாரிகளிடம் நிலவரத்தை கேட்டறிந்தார்

டெல்லியில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று மாலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி
டெல்லியில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று மாலை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அமைதியை நிலைநாட்டும் பொறுப்பில் ஈடுபட்டுள்ள அஜித் தோவல், அங்கு ஆய்வு மேற்கொண்டதோடு, தற்போதைய நிலவரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், காவல்துறையினர் தங்களது பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை அஜித் தோவல் கேட்டறிந்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்