இந்தியா

டெல்லியில் அதிகாலை முதல் பெய்து வரும் மழை

டெல்லியில் அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தந்தி டிவி

ராஜ்பாத், இந்தியா கேட், தீன் மூர்த்தி மார்க், மின்டோ சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில், நனைந்தபடி மக்கள் சென்றனர். மின்டோ கேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாலத்தின் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது. அந்த வழியாக சென்ற பேருந்து ஒன்று பேருந்தில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. இதை அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்து மீது ஏணியை வைத்து பயணிகளை மீட்டனர்.

தொடர் மழை... வீதிகளில் தேங்கிய மழைநீர்...மழையில் செல்லப் பிராணியுடன் சிறுவர்கள் உற்சாகம்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், கொட்டும் மழையில் சிறுவர்கள் செல்லப் பிராணியுடன் நனைந்து மகிழும் காட்சி வெளியாகி உள்ளது. நொய்டாவின் பத்தாவது பிரிவு பகுதியில், சாரலும், தூறலுமாக மழை பெய்து வருகிறது. வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பெருமழைக்கு பிறகு சன்னமாக விழும் மழைத் துளியை ரசித்தபடி, செல்லப் பிராணியுடன் சிறுவர்கள் நனைந்து மகிழ்ந்தனர்.

குட்டை குழிக்குள் விழுந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு - மாபியா கும்பல் தோண்டிய குழிகள் என புகார்

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில், சட்ட விரோதமாக தோண்டிய குட்டை குழிக்குள் விழுந்த 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய குழிக்குள் விழுந்த 3 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. குழிகளை மூடாததும், சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி கொள்ளையில் ஈடுபட்ட மாபியா கும்பலுக்கு, போலீசார் ஆதரவாக செயல்படுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்