இந்தியா

காணொலி மூலம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்பு

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.

தந்தி டிவி

டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா காரணமாக இழப்பீட்டு தொகையில் ஏற்பட்டுள்ள இடைவெளி இந்த ஆண்டு 2.35 லட்சம் கோடியாக இருக்கும் என்றார். அதே சமயம், ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக ஏற்படும் இழப்பீடு 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ரிசர்வ் வங்கியோடு கலந்துபேசி குறைந்த வட்டியில் 97 ஆயிரம் கோடி நிதியை, மாநிலங்களுக்கு வழங்குவது என்றும், இதனை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரியிலிருந்து கட்டிக் கொள்ளலாம் என்கிற வாய்ப்பையும் வழங்க உள்ளதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்