இந்தியா

காணொலி மூலம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்பு

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.

தந்தி டிவி

டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா காரணமாக இழப்பீட்டு தொகையில் ஏற்பட்டுள்ள இடைவெளி இந்த ஆண்டு 2.35 லட்சம் கோடியாக இருக்கும் என்றார். அதே சமயம், ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக ஏற்படும் இழப்பீடு 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ரிசர்வ் வங்கியோடு கலந்துபேசி குறைந்த வட்டியில் 97 ஆயிரம் கோடி நிதியை, மாநிலங்களுக்கு வழங்குவது என்றும், இதனை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரியிலிருந்து கட்டிக் கொள்ளலாம் என்கிற வாய்ப்பையும் வழங்க உள்ளதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்