இந்தியா

காணொலி மூலம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்பு

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.

தந்தி டிவி

டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா காரணமாக இழப்பீட்டு தொகையில் ஏற்பட்டுள்ள இடைவெளி இந்த ஆண்டு 2.35 லட்சம் கோடியாக இருக்கும் என்றார். அதே சமயம், ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக ஏற்படும் இழப்பீடு 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ரிசர்வ் வங்கியோடு கலந்துபேசி குறைந்த வட்டியில் 97 ஆயிரம் கோடி நிதியை, மாநிலங்களுக்கு வழங்குவது என்றும், இதனை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரியிலிருந்து கட்டிக் கொள்ளலாம் என்கிற வாய்ப்பையும் வழங்க உள்ளதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை