டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபரான உமருடன் தொடர்பில் இருந்ததாக கைதான இருவர், ஷோரூமில் கார் வாங்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. கார்கள் மூலம் தொடர்ச்சியான குண்டுவெடிப்பு நடத்த திட்டம் இருந்ததாக விசாரணை அமைப்புகள் தெரிவித்திருந்த நிலையில், டாக்டர் முசாமில், ஷாஹீன் சயீத் இருவரும் ரொக்கமாக பணம் செலுத்தி கார் வாங்கியுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.