Delhi Bridge Collapse | உடைந்து விழுந்த இரும்பு பாலம் - துடிதுடித்து பெண் பரிதாப பலி டெல்லி ரூப் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயின் மீது அமைக்கப்பட்டிருந்த சிறிய இரும்பு பாலம் திடீரென உடைந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார்.. பாலம் உடைந்ததும், அதன் மேல் நின்றிருந்த அந்தப் பெண் பாலத்துடன் சேர்ந்து கால்வாயில் விழுந்தார். தகவல் அறிந்த உடனேயே காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்...