இந்தியா

ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் - 24 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட சகோதரிகள்

ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் இருவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்களின் 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

தந்தி டிவி

இடுப்பு பகுதியில் ஒட்டிப்பிறந்த இரண்டு வயது இரட்டை சகோதரிகள் இருவரை தனித்தனியாக பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஈடுபட்டது. இதற்காக 64 மருத்துவ பணியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து, இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட அறுவை சிகிச்சை சனிக்கிழமை காலை 9 மணி வரை நடைபெற்றது. தற்போது நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்துள்ளது என்றும், பிரிக்கப்பட்ட சகோதரிகள் இருவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்