இந்தியா

"சபரிமலை செல்ல அனுமதிக்காவிட்டால் கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"- பிந்து

தம்மை சபரிமலை செல்ல அனுமதிக்கவில்லை என்றால் ,கேரள அரசு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று பிந்து என்ற பெண் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் சபரிமலைக்கு முதன் முதலாக செல்ல முயன்ற பெண் மீது மிளகுப் பொடி வீசப்பட்டது. எர்ணாகுளத்தில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சமூக ஆர்வலரான பிந்து அம்மிணி என்ற அந்த பெண் நேற்று காலை வந்தபோது அங்கிருந்த ஒருவர் மிளகுப் பொடியை ஸ்பிரே மூலமாக முகத்தில் தெளித்தார். இதனால் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து பிந்துவை சிகிச்சைக்காக கொச்சி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதனிடையே தம்மை சபரிமலை செல்ல அனுமதிக்கவில்லை என்றால் கேரள அரசு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக பிந்து தெரிவித்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை