இந்தியா

"சபரிமலை செல்ல அனுமதிக்காவிட்டால் கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"- பிந்து

தம்மை சபரிமலை செல்ல அனுமதிக்கவில்லை என்றால் ,கேரள அரசு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று பிந்து என்ற பெண் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் சபரிமலைக்கு முதன் முதலாக செல்ல முயன்ற பெண் மீது மிளகுப் பொடி வீசப்பட்டது. எர்ணாகுளத்தில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சமூக ஆர்வலரான பிந்து அம்மிணி என்ற அந்த பெண் நேற்று காலை வந்தபோது அங்கிருந்த ஒருவர் மிளகுப் பொடியை ஸ்பிரே மூலமாக முகத்தில் தெளித்தார். இதனால் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து பிந்துவை சிகிச்சைக்காக கொச்சி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதனிடையே தம்மை சபரிமலை செல்ல அனுமதிக்கவில்லை என்றால் கேரள அரசு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக பிந்து தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை