இந்தியா

தமது வெற்றிக்கு காரணம் தீபிகா படுகோன்- கணவரின் புகழாரத்தால் கண்ணீர் விட்ட தீபிகா

கணவர் ரன்வீர் சிங் தம்மைப் புகழ்ந்து பேசியதும், நடிகை தீபிகா படுகோன் கண்ணீர் சிந்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி
கணவர் ரன்வீர் சிங் தம்மைப் புகழ்ந்து பேசியதும், நடிகை தீபிகா படுகோன் கண்ணீர் சிந்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ரன்வீர் சிங் மேடையில் உரையாற்றினார். அப்போது 'பத்மாவத்' படத்தில் வேண்டுமானால், தமது ராணியை இழந்திருக்கலாம், ஆனால் நிஜ வாழ்வில் தமது ராணி தமக்கு கிடைத்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார். குழந்தை போன்ற தீபிகாவை தாம் மிகவும் விரும்புவதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் தாம் சாதித்ததெல்லாம் அவரால்தான் எனவும் புகழ்ந்துரைத்தார். இதைக் கேட்ட தீபிகா கண்ணீர் சிந்தியதும், தம்மை மேலும் அழாமல் கட்டுப்படுத்திய காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்