இந்தியா

நண்பனின் தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற நபர் - தாயை அவதூறாக பேசியதால் வெறிச்செயல்

தாயை அவதூறான வார்த்தைகளால் திட்டிய நண்பனின் தலையை வெட்டி கொன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

தந்தி டிவி

* இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரீசுக்கும், பசுபதியின் தாய்க்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

* அப்போது கிரீஷ், பசுபதியின் தாயை அவதூறாக பேசியதோடு, ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து, இன்று காலை கிரீஷிடம், தாயை ஆபாசமாக திட்டியது பற்றி பசுபதி கேட்டுள்ளார்.

* இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, அது கடைசியில் கைகலப்பாக மாறியது. அப்போது பசுபதி, கிரீஷின் தலையை கோடரியால் வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட மலவள்ளி புறநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

* பின்னர், கொலை செய்தது பற்றி கூறி, போலீசாரிடம் பசுபதி சரணடைந்துள்ளார். இந்த பயங்கர கொலை சம்பவம் மண்டியா மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் அடிக்கடி ஒலிக்கும் `தமிழ்நாடு’ - முத்தான மூன்று அறிவிப்புகள்

Union Budget 2026 | "இந்த பட்ஜெட்ல தமிழ்நாட்டுக்கு நிறைய..." - முக்கிய புள்ளி கொடுத்த அப்டேட்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு