கேரளாவில் இறந்து கிடக்கும் காகங்கள் - அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள் 
இந்தியா

கேரளாவில் இறந்து கிடக்கும் காகங்கள் - அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்

கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த எடக்கானம் பகுதியிலும் காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் புத்தன்பீடிகா, மாலூர் உள்ளிட்ட பகுதிகளில் இறந்து கிடக்கும் காகங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்..

thanthitv

கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த எடக்கானம் பகுதியிலும் காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் புத்தன்பீடிகா, மாலூர் உள்ளிட்ட பகுதிகளில் இறந்து கிடக்கும் காகங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்..கண்ணூர் இரிட்டி அருகே கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏராளமான காகங்கள் இறந்து கிடந்தன. பரிசோதனையில் இறந்து கிடந்த காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் எடக்கானம் என்ற இடத்தில் கிடந்த காகங்களுக்கும் பறவைக்காய்ச்சல் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் புத்தன்பீடிகா மாலூர் திரிகடாரிபோபகுதியில் க டந்த 2 நாட்களில் 6 காகங்கள் இறந்து கிடந்தன. சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவக் குழு, இறந்த காகங்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்