இந்தியா

அதிகம் தடுப்பூசி செலுத்திய முதல் 10 மாநிலங்கள்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய அளவிலான பட்டியலில் தமிழகம் 11வது இடத்தில் தொடர்கிறது

தந்தி டிவி

நாடு முழுவதும், மே 31 காலை வரை 21 கோடியே 31 லட்சம் தடுப்பூசிகள் போடுப்பட்டுள்ளன. 16 கோடியே 86 லட்சம் மக்களுக்கு ஒரு டோஸும், 4 கோடியே 45 லட்சம் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

12 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் இதுவரை 2 கோடியே 23 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் 1 கோடியே 80 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

6 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், இதுவரை 1 கோடியே 69 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

8 கோடியே 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானில் இதுவரை 1 கோடியே 68 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

10 கோடி மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில், இதுவரை 1 கோடியே 44 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

6 கோடியே 83 லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவில், இதுவரை 1 கோடியே 34 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

8 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட மத்திய பிரதேசத்தில், இதுவரை 1 கோடியே 8 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 12 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில், இதுவரை 1 கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 5 கோடியே 44 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆந்திராவில், இதுவரை 97 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

3 புள்ளி 6 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளாவில், இதுவரை 92 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 7 கோடியே 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், இதுவரை 88 லட்சத்து 91 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை