இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரள மாணவி - உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரள மருத்துவ மாணவியின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரள மருத்துவ மாணவியின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உஹான் நகரிலிருந்து கேரளா திரும்பிய அந்த மாணவி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் நபர் ஆவார். திருச்சூரை சேர்ந்த அந்த மாணவி தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நிலை முன்னேற்றமடைந்து கொரோனா வைரஸ் பாதிப்பு மறைந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆலப்புழாவில் உள்ள ஆய்வக அறிக்கையில் இது தெரிய வந்துள்ளதாகவும், ஆனாலும் புனேவிலிருந்து மருத்துவ ஆய்வறிக்கை வந்த பின்புதான் அது உறுதி படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். கேரளாவில் கொரோனா வைரஸ் அறிகுறி காணப்படும் 34பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனிவார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ