இந்தியா

ரூ 500-ல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்

குறைந்த செலவில் கொரோனா பரிசோதனை முடிவை விரைந்து தெரிந்து கொள்ள வகை செய்துள்ளது, புதிய கொரோனா பரிசோதனை கருவியான 'பெலுடா'.

தந்தி டிவி

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சத்ய ஜித்ரே உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரமான பெலூடாவின் பெயர் தான், இந்த கொரோனா பரிசோதனை கருவிக்கு சூட்டப்பட்டுள்ளது.

தினமும் 20 மணி நேரம் என இரண்டு மாத காலமாக பல ஆய்வுகளை மேற்கொண்டு ஸ்ட்ரிப் போன்ற இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர், விஞ்ஞானிகள் தேபோஜ்யோதி சக்கரவர்த்தி, சவுவிக் மைத்தி ஆகியோர் தலைமையிலான குழு.

கிட்டத்தட்ட பிரக்னன்சி டெஸ்ட் மாதிரி எளிய முறையில் இந்த கொரோனா பரிசோதனை கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரிப்பில் இரண்டு கோடு வந்தால் கொரோனா பாசிடிவ் என்றும், ஒரு கோடு மட்டும் வந்தால் 98 சதவீதம் தொற்று இல்லை என்பதும் உறுதியாகிறது.

சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த பரிசோதனை முறையில், வைரஸின் ஆர்.என்.ஏ பிரித்தெடுக்கப்பட்டதும், வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்த 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே தேவைப்படுகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்