கொரோனா தொற்று தாக்கம் தங்களுக்கும் பரவுமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகி வரும் நிலையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நவீன கருவியை தென்பிராந்திய கடற்படை அதிகாரிகள் உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் கடலில் நிற்கும் கப்பல்களில் இருந்தும், அல்லது வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.