இந்தியா

மேலும் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தந்தி டிவி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம் மேலும் 34 ஆயிரத்து 703 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 932ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 553 பேர் இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 3 ஆயிரத்து 281ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 51 ஆயிரத்து 864 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4 லட்சத்து 64 ஆயிரத்து 357 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 35 கோடியே 75 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்