டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தை காலி செய்ய மத்திய அரசு நோட்டீஸ் டெல்லி அக்பர் ரோட்டில் கடந்த 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தை, வரும் சனிக்கிழமைக்குள் காலி செய்யுமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1978 முதல் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அலுவலகம் மற்றும் துணை அமைப்புகளின் அலுவலகங்களை அரசு சொத்துக்கள் எனக் குறிப்பிட்டு ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. 2025 ஜனவரியில் சோனியா காந்தி தலைமையில் 'இந்திரா பவன்' என்ற புதிய தலைமையகம் திறக்கப்பட்ட போதிலும், பழைய இடங்களைக் காலி செய்யாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தலைமையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும், கால நீட்டிப்பு கோரவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.